இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டர்நேஷனல் தனது ஊழியர்கள் மற்றும் சேனல் பார்ட்னர்களுக்கு ஊக்குவிப்பு சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. வியட்நாமின் அழகிய புக் குவாக் தீவுப் பகுதியில் இந்தப் பயணம் நடைபெற்றது. நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்ட 32 இந்தியப் பயணிகள் கொண்ட படகு, ஜூலை 11 அன்று கடுமையான கடல் நிலைமை காரணமாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த சோகம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த லாவா நிறுவனத்தின் சேனல் பார்ட்னர்கள் மற்றும் ஊழியர்கள் ஆவர். ஒரு நிறுவனக் குழு உறுப்பினரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

படகு கவிழ்ந்த சமயத்தில் பயணிகள் உதவிக்கு அலறிய காட்சிகள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் வெளியானதும், இந்தியா முழுவதும் இரங்கல் அலைகள் எழுந்தன. வியட்நாம் பிரதமர் உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது. படகு ஓட்டியவர் கைது செய்யப்பட்டார். இந்தியத் தூதரகம் உடனடியாக உதவி செய்து, உயிர் பிழைத்தவர்களையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் நாடு திரும்ப ஏற்பாடு செய்தது.இந்தத் துயரச் சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!
லாவா நிறுவனம் இந்தச் சம்பவத்தால் ஆழ்ந்த மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் வழங்குவதாக அறிவித்தது. முக்கியமாக, உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் தலா 25 லட்சம் ரூபாய் எக்ஸ்-கிரேஷியா நிதியுதவி வழங்குவதாக லாவா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிதியுதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து..! 32 இந்தியர்களின் நிலை என்ன..? கதி கலங்கவைக்கும் சம்பவம்..!