தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பெரம்பூர் சட்டமன்ற தொகுதியிலேயே தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
இரண்டு நிமிடங்களில் தனது உரையை போலீசாரின் அறிவுரையை ஏற்று முடித்துக் கொண்டார். இருப்பினும் அதிக அளவில் கூட்டம் கூடியதாகவும் பல்வேறு காரணங்களை கூறியும் விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் அத்துமீறியதாக கூறி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த சம்பவத்தை தமிழக வெற்றி கழகத்தினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார். பெரவள்ளூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: ஒரு கரூர் துயரம் போதும்... விஜய் மீது ஏன் CASE போட்டீங்க..! கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா..!!
இதற்கிடையில் காவல் துறையினர் பாரபட்சமாக நடப்பதாக தவெகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் எதற்காக விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் நடந்த சம்பவம் தொடர்பாகவும் தலைமை தேர்தல் அதிகாரி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!