தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கடம்பூர் ராஜூ அறிவிக்கப்பட்டு இன்று மனு தாக்கல் செய்தார் பின்னர் கடம்பூர் ராஜூ செய்தியாளிடம் கூறுகையில் : நடைபெறுகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தொடர்ந்து நான்காம் முறையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். மூன்று தேர்தலை சந்தித்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளேன். தொடர்ந்து 15 ஆண்டு காலம் மக்கள் பணியாற்ற மக்கள் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளனர் .
இந்த மக்கள் பணியில் வரலாற்று திட்டமான மக்களின் 50 ஆண்டு கால கனவு திட்டமான இரண்டாவது பைப் லைன் திட்டம். நிர்வாக வசதிக்காக கோவில்பட்டி இரண்டாக பிரித்து கயத்தாறு புதிய தாலுகா உருவாக்கியது, கோவில்பட்டியில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ,அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கட்டிட வசதி, அரசு கலைக் கல்லூரி ஹாக்கி மைதானம், கோவில்பட்டி தொகுதியில் உள்ள 64 ஊராட்சிகள் கோவில்பட்டி நகராட்சி மற்றும் மூன்று பேரூராட்சிகள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் காலத்தில் செய்திருக்கிறேன். தன்னிறவு பெற்ற தொகுதியாக கோவில்பட்டி தொகுதி விளங்குகிறது .
விவசாயத்துக்கு அடுத்தப்படியாக தீப்பெட்டி தொழிலில் ஜிஎஸ்டி வருகின்ற நேரத்தில் தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை நான் அமைச்சராக இருந்த காலத்தில் உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று 18 சதவிதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக குறைத்தேன். தற்போது ஐந்து சதவீதமாக உள்ளது. அடுத்து கோவில்பட்டி என்றால் கடலை மிட்டாய், அதற்கு சர்வதேச அளவில் மரியாதை வேண்டுமென்றால் புவிசார் குறியீடு வேண்டும் என கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் புவிசார் குறியீடு பெற்றுத் தந்துள்ளேன்.
இதையும் படிங்க: முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!
அதேபோல் அரசு மருத்துவமனை எடுத்துக் கொண்டால் தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிடி ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், டயாலிசிஸ் யூனிட், தீக்காயப் பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் மருத்துவமனை கட்டமைப்பு வசதிக்கு எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்தும் அரசு நிதிகள் என 100 கோடி ரூபாய் பெற்று தந்துள்ளேன். இந்த மருத்துவமனையை நகர மக்கள் தமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் அளவிற்கு இயங்குகிறது என்று சொன்னால் அதற்கு அடிப்படை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான்.
இந்த ஐந்து ஆண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தீப்பெட்டி தொழிலுக்கு மிகவும் சவாலாக இருக்கும் சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து. தற்போது அதை தடை செய்யும் அளவிற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறேன்அதே போல் ரயில்வே போக்குவரத்தில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது நின்று செல்கிறது. அதேபோல் பழமை வாய்ந்த ரயில் நிலையத்தை அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி ரயில் நிலையம் அனைத்து வசதிகளுடன் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது.
இப்படி எண்ணற்ற பணிகளை தொகுதி தாண்டி செய்திருக்கிறோம். தொடர்ந்து நல்ல பணிகளை செய்து இருக்கின்ற காரணத்தினால் என்னுடைய வெற்றி எளிதாக ஒன்றாக தெரிகிறது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் பணி சிறப்பாக செய்து இருக்கின்ற காரணத்தினால் எங்களது வெற்றி என்பது துளி கூட சந்தேகத்துக்கு இல்லாத அறிவிக்கப்பட்ட வெற்றியாக ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகின்ற நிலையில் தான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறேன்.
அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 54 ஆண்டுகள் ஆகிறது. அதற்குப் பிறகு எத்தனையோ கட்சிகள் தமிழகத்தில் உதித்தது புதியதாக உதிக்கப்பட்ட எந்த கட்சிகளாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளை பாதித்ததாக சரித்திரம் இல்லை. மூன்று முறை வெற்றி பெற்றவர் முன்னாள் முதல் எம்ஜிஆர். அதேபோல் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றவர் முன்னாள் முதல் ஜெயலலிதா இந்த பெருமை அதிமுகவும் முன்னாள் முதல் ஜெயலலிதாக்கும் உண்டு. இந்த வரலாறு யாருக்கும் இல்லை. திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை வராது. இந்த நிலைமை தான் தமிழக மக்கள் வாக்களிக்க போற போகிறார்கள் ஆட்சி மாற்றம் உறுதி என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சோக சம்பவம்: கிணற்றில் பாய்ந்த கார்..!! குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாப பலி..!!