அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஞானசேகரன் குற்றவாளி:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி ராஜலட்சுமி அறிவித்துள்ளார்.
வழக்கு கடந்து வந்த பாதை:
2024 டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டிசம்பர் 25ம் தேதி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர். அதை தொடர்ந்து டிசம்பர் 28ஆம் தேதி மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு... அல்லிகுளம் நீதிமன்றம் அறிவிப்பு!

இந்நிலையில் 2025 ஜனவரி 5ஆம் தேதி கைதான ஞானசேகரனுக்கு எதிராக திருட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததை எடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பிப்ரவரி 21 ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
இதை தொடர்ந்து மார்ச் 7ம் தேதி வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் ஏப்ரல் 8ம் தேதி வழக்கிலிருந்து ஞானசேகரனை விடுவிக்க மறுத்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மே 21 முதல் 23 ஆம் தேதி வரை இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மே 23 ஆம் தேதி வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: சார்கள், தம்பிகளுடன் திமுகவுக்கு என்ன தொடர்பு.? விலாவரியா விளக்குறீங்களா.? எல். முருகன் கிடுக்கிப்பிடி!