வேலூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை வாக்கை திருடும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் அதற்க்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் திமுக ஆட்சியில் சட்டமன்ற சீர்கெட்டு இருப்பதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு, அவருடைய ஆட்சியில் எப்படி சட்டம் ஒழுங்கு இருந்தது? எப்படி சட்டமன்றம் பாதுகாக்கப்பட்டது? அதையெல்லாம் புள்ளி விவரத்துடன் வெள்ளை அறிக்கையுடன் எடப்பாடி பழனிச்சாமியை உட்கார சொல்லுங்கள். தற்போதுள்ள ஆட்சியாளர்களும் உட்காரட்டும். நாட்டு மக்களுக்கு சொல்லட்டும்.
எடப்பாடி பழனிச்சாமி எப்போது முதலமைச்சர் ஆக வந்தார். நாட்டு மக்களுக்கு என்னென்ன செய்தார்.மாதத்திற்கு என்ன என்ன அசம்பாவிதங்கள் நடந்தன. வருடத்திற்கு எத்தனை அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. அவர் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு எத்தனை சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்துள்ளது. இதையெல்லாம் அவர் சொல்லட்டும் சொல்லி பிறகு திமுக அரசு மீது குற்றம் சொல்லட்டும். அரசியலுக்காக எடப்பாடி பழனிச்சாமி இதுபோன்று பேசி வருகிறார். அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை.அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக் கொடுப்போம் என்றார்.
அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் பேசியது நியாயமா பத்திரிகையாளர்களே நீங்களே சொல்லுங்கள். ஒரு தலைவரை பிச்சைக்காரர்கள் ஒட்டு போட்ட சட்டை போட்டவர்கள் என்றெல்லாம் எந்த தலைவர்களும் அரசியல் நாகரீகம் இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த வார்த்தையை பயன்படுத்தலாமா?, ஒரு கட்சி தலைவரைப் பார்த்து பிச்சைக்காரன் ஒட்டு போட்ட சட்டைக்காரன் என்றெல்லாம் பேசலாமா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் தான் திமுக ரோல் மாடல்... எடப்பாடி பழனிச்சாமி சாடல்...!
அவருடைய பேச்சு எதைக் குறிக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு?, அவரின் பேச்சு வன்மத்தை காட்டுகிறது. அவருக்கு பேச தெரியவில்லை வயதானவர் அவரை மன்னித்து விடுவோம் விட்டுவிடுங்கள் என்றார். ஜிஎஸ்டி வரி குறைந்தது பற்றி பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் துணிக்கடைகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறாரே என்ற கேள்விக்கு, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பதில் சொல்வது. இதுவரை பிரதமர் ஒரு வருத்தம் கூட கேட்கவில்லை. பாதிப்பு பாதிப்பு தானே. 60 லட்சம் கோடி வசூல் செய்துள்ளார்கள் அது எங்கு சென்றது அதற்கெல்லாம் ஏன் பதில் சொல்லவில்லை?. மக்களுடைய வரி பணம் தானே மக்கள் எல்லாம், இன்று கடனாளியாக உள்ளனர் மக்களுக்கான அரசாக இருக்கும் பொழுது அதை தெரிவிக்க வேண்டும். தமிழக மக்கள் எந்த அளவுக்கு சிரமத்தில் உள்ளனர் என்றார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பலர் விலகி பல கட்சிகளில் சேருகின்றார்களே என்ற கேள்விக்கு, கட்சிக்காரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆறு மாதங்களுக்கு முன்பு ஒதுங்கி விட்டார்கள் அதன் பிறகு எந்த கட்சியில் வேண்டுமானாலும் சென்று சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் எங்களுடைய வேண்டுகோள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வருபவர்கள் தோழமைக் கட்சிக்காரர்கள் சேரக்கூடாது. ஆனால் நாங்கள் தோழமைக் கட்சியிலிருந்து வருபவர்களை சேர்ப்பதில்லை. கூட்டணியில் சங்கடங்கள் ஏற்படும் என்பதால் நாங்கள் சேர்ப்பதில்லை. அதேபோல கூட்டணி உள்ள கட்சிகளும் இருக்க வேண்டும் அதுதான் தர்மம் என்றார்
காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளை மீண்டும் போட்டி இட கேட்பீர்களா என்ற கேள்விக்கு, உங்களுடைய விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்றார். காங்கிரஸ் கட்சியை விஜய் விமர்சிக்க வில்லையே ஏன் என என்ற கேள்விக்கு, காங்கிரசை விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை, அதனால் விஜய் விமர்சிக்கவில்லை.
காங்கிரஸ் இந்த தேசத்திற்கான கட்சி மக்களுக்கான கட்சி காங்கிரசை விமர்சிப்பவர்கள் வன்மமிக்கவர்களாக இருப்பார்கள். நல்லவர்கள் யாரும் காங்கிரசை விமர்சிக்க மாட்டார்கள் என்றார்.
விஜயுடன் கூட்டணி சேர்வதைப் போல பேசப்படுகிறது என கேட்டதற்கு, இல்லை என்று கூறினார். அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என்று பேசப்படுகிறது. அது அவருடைய விருப்பம் அவர் தொடங்கலாம் என்று கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் தான் இந்தியாவுக்கே வரி குறைப்பு... உருட்டி தள்ளிய சி.வி.சண்முகம்...!