மதிமுகவில் உட்கட்சி பிரச்சனை தீவிரமாக இருந்த நிலையில் தற்போது மல்லை சத்யா கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் வைக்கோ தெரிவித்திருக்கிறார்.
மதிமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா மீது ஏற்கனவே கட்சியினுடைய பொதுச்செயலாளர் வைகோ ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தார். மல்லை சத்யாவிடம் இது தொடர்பான விளக்கம் 15 நாட்கள் அனுப்ப வேண்டும் என ஏற்கனவே வைகோ குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கான விளக்கத்தையும் கடந்த வாரம் மல்லை சத்யா மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக மதிமுகவினுடைய பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலமாக வெளியிட்டிருக்கிறார்.
ஏற்கனவே மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வைகோ குறிப்பிட்டிருந்தார். ஆனால் மல்லை சத்யா கொடுத்திருந்த விளக்கம் ஏற்கக்கூடிய வகையில் இல்லை என்றும் அதேபோன்று கட்சியினுடைய விதிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை விதிகளுக்கு மீறி மல்லை சத்யா செயல்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ள வைகோ, தற்போது அவரை அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மல்லை சத்யாவுக்கு அவ்ளோ தான் டைம்... கெடு விதித்த வைகோ! பதில் சொல்லலனா...
இதையும் படிங்க: #BREAKING: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்! வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!