வேட்டையன் பட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 171வது படமான இதில் சத்யராஜ், ஷாபின், உபேந்திரா, சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு மற்றும் தாய்லாந்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாய்லாந்து புறப்பட்டார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். ஆரம்பத்தில் சகஜமாக பேச ஆரம்பித்த ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்கள் மட்டுமே ஷூட்டி இருப்பதாகவும் கூறினார். மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கவுள்ளது என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக சொல்லப்படுகிறதே என கேள்வியை முடிப்பதற்குள் கோபமாக ரஜினிகாந்த், :அரசியல் பற்றிய கேள்விகளைக் கேட்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்” எனக்கூறிவிட்டு வேகமாக விமான நிலையத்திற்குள் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: பாட்ஷாவாக மாறி புத்தாண்டு வாழ்த்து ..ரகிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்
இதையும் படிங்க: காலையிலேயே ரசிகர்களுக்கு வந்த இன்ப செய்தி ...ரஜினி சொன்ன சூப்பர் அப்டேட்