விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் விவசாய சங்க தலைவர்களையும் இன்று சந்தித்து பேச உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தவாறு தமிழக அரசு விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. உடனடியாக பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி திருச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களை நேற்று சந்தித்து பேசி நிலையில் இன்று மூன்று அமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளதாகவும், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது தொடர்பாக பேச உள்ளதாக வினோத் தெரிவித்தார் .
இதையும் படிங்க: #BREAKING ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி விவகாரத்தில் அதிரடி திருப்பம்... திமுக பிரமுகருக்கு இடியை இறக்கிய போலீஸ்...!
மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் ஜனவரி மாதம் வரை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் வேண்டுமென விவசாயிகள் கூறி வருகிறார்கள் என கேட்டதற்கு, விவசாயிகளின் கோரிக்கை பரிசளிக்கப்படும் என்றும், தண்ணீர் பிரச்சனை மற்றும் மாவட்டங்களுக்கு ஏற்றவாறு விளைச்சல் கிடைக்கக்கூடிய பயிர் வகைகளை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பரிந்துரை செய்திருப்பதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தினை தூய்மையாக பராமரிக்க வேண்டும் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் அமைச்சர் வினோத் தெரிவித்தார் .
இதையும் படிங்க: ராதாகிருஷ்ணனுக்கு புதிய பொறுப்பு... மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம்... தமிழக அரசு அறிவிப்பு..!!