வரும் 12 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொள்ள உள்ளார். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலம் செல்ல உள்ளார். இதற்காக சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 11-ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் வர உள்ளதாகவும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் மேட்டூர் செல்ல முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களையும் கட்சியினரையும் சந்திக்க உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: குப்பையில வீச தான் மாநிலக் கல்வி கொள்கையா? பதில் சொல்லுங்க ஸ்டாலின்.. ஃபுல் ஃபார்மில் ராமதாஸ்!!

தொடர்ந்து ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் தண்ணீர் திறந்து வைக்க உள்ளதாகவும் அதைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகளாகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஒரு லட்சம் பயனாளிகளுக்கு 1200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!