உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் 'தக்லைப்' திரைப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய கமல்ஹாசன், கன்னடம் தமிழிலிருந்து உருவானது என்று பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வரும் 'தக்லைப்' படத்தின் பேனர்களும் கிழித்து எறிந்து வருகிறார்கள். இதன் காரணமாக கர்நாடகாவில் இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருவதோடு, கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால் நடிகர் கமல்ஹாசன், நான் பேசியதில் எந்த தவறும் இல்லை, அதனால் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: கடும் விமர்சனத்திற்குள்ளாகும் திமுக ஆட்சி.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா?
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் இது ஒரு ஜனநாயக நாடு நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன் கர்நாடகா ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது நான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன் இல்லை என்றால் மாட்டேன் என்றார்

இந்நிலையில் வரும் ஜூன் 11ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலங்களவை எம்.பி ஆகப்போகும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மாநிலங்களவையில் மநீமவுக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்ய சொல்லி இருப்பதாகவும், மாநிலங்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசியதாகவும், நாட்டுக்குத் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணியில் வந்துள்ளேன் என்றும் கூறினார். மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்கான எனது குரல் ஒலிக்கும், ஆனால் தமிழ்நாட்டுக்காக எப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் என்னுடைய கன்னட மக்கள் மீதும், ஆந்திர மக்கள் மீதும், கேரள மக்கள் மீதும் என்னுடைய அன்பு தொடர்பு கொண்டே இருக்கும்.. இது ஜனநாயக நாடு சட்டத்தையும் நீதியையும் நம்புகிறேன், நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்க தயங்கி இருக்க மாட்டேன், இதுதான் என்னுடைய வாழ்க்கை முறைஎன்றும் கமல்ஹாசன் கூறினார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர்..!