பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசியனர். அரூர் சட்டமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் அனிதா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அர்ச்சனா தமிழருவி, பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூபதி ராமசாமி, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பழனியம்மாள். தர்மபுரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சாந்தலட்சுமி. ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 2026- தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவிட்டு பேசிய போது: நமக்கென்று அரசியல் அதிகாரம் இல்லை. உரிமை இழந்து. உடமை இழந்து. இலவசத்திற்கு கையேந்தி நிற்கின்ற வறுமையின் நிலையில் தன்மானத்தை இழந்து வாழ்கின்றன மக்களாக நாம் நிற்கிறோம். ஆகா சிறந்த ஒரு பொன்னியின் பிள்ளைகள் நாம் அந்த மொழியின் அருமை தெரியாமல் தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா என்று அடுத்தவன் மொழி ஆங்கிலம் தலைதூக்கி நிற்கிறது.
நாம் தமிழரே என்று இன அடையாளத்தையே மறந்து அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அடிமை என்றே தெரியாத வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேலைக்காக வேறு நாட்டிற்கும் மாநிலங்களுக்கும் போக்குகிற நிலைமை மாற்ற வேண்டும். அவரவர் வாழ்விடத்திலேயே வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசாங்க வேலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கல்வி,மருத்துவங்கள் உலக தரத்திற்கு உயர்த்தி கொடுத்து வேண்டும். தூய்மையான குடிநீரை கிடைக்க செய்து, கல்விக்கு ஏற்ற வேலையை கொடுத்து அதற்கேற்ற சம்பளத்தை கொடுத்து தரமான வாழ்க்கை வாழ செய்ய வேண்டும். கனவோடு தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறோம்.
பத்து ஆண்டுகள் தேர்தல் அரசியலை நிக்கிறோம். ஐந்தாவது முறையாக பொது தேர்தலை சந்திக்கிறோம். சட்டமன்றத் தேர்தலை மூன்றாவது முறையாக சந்திக்கிறோம். எங்களுடைய கனவு மிகப்பெரிது உலகத்தில் தலைசிறந்த என் தாய்நாடு மாற்றி படைக்க வேண்டும் என் பெரும் கனவு. பசி என்று சொல் இல்லாத ஒழிக்க வேண்டும். வேலை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.என்று என் கனவு. சீமான் சொல்லுவதெல்லாம் நடக்குமா என ஏசி பேசியவர்களும் விமர்சித்தவர்களுக்கும் அவர்களுக்காக அல்ல. என்னை நம்பி 36.லட்சம் மக்கள் வாக்கு செலுத்தினார்களே அவர்களுக்காக நாங்கள் ஆட்சி வந்தால் வேலை வாய்ப்பு பெருக்கி அவரவர் வாழ்விடத்திலே தொழிற்சாலைகளை அமைத்து கொடுப்போம்.
இதையும் படிங்க: ஒன்றரை கோடி வட இந்தியர்களுக்கு ஓட்டுரிமை... ஒட்டுமொத்த தமிழகமே ஷாக்... தேர்தல் களத்தை தெறிக்கவிட்ட சீமான்...!
நான் பத்தாண்டு காலம் அரசியலில் என் கனவு பேசியதை என்பதை காணொளி காட்சி மேடையிலே பொதுக் கூட்டத்தில் போட்டு காண்பித்தார். அவரவர் வாழ்விடத்திலே நிலமும். வளமும். சேர்ந்த தொழிற்சாலையில் வேலை வாய்ப்புகள் வளர்ச்சி திட்டத்தையும் கொண்டு வருவேன் . கடந்த அறுபது ஆண்டுகால ஆட்சியில் சாதி. மதம்.சாராயம் பணம்.மானியம். போனஸ் இலவசம் இதுதான். பத்தாயிரம் ஏக்கர் அல்லது 20,000 கேட்கிறார்கள் நிலத்தில் இயற்கை முறையில் கரும்பு. வாழை. மற்றும் காய்கறிகள் பழங்கள் வகைகள் அமைக்கப்படும். வெளிநாட்டுகளுக்கு வெளி மாநிலங்களுக்கு சந்தைப்படுத்தப்படும் இதன் மூலம் படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும்.
ஆடுகள், மாடுகள், பன்றிகள், கோழி வளர்த்து இதன் இறைச்சிகளை வெளி மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி பெரும் சந்தைப்படுத்தினால் இதனால் வேலை வாய்ப்பு பெருகும் என தெரிவித்தார். மேலும் கழுதை வளர்ப்பு பண்ணை அமைத்தால், கழுதை பால் ஒரு லிட்டர் 3.000 ரூபாய். கழுதை பால் பவுடர் கிலோ 20,000 வரை. கழுதை சோப்பு. கழுதை சாணம். ஆகிய பொருள்கள் சந்தையில் விலை உயர்வாக விற்கப்படுகிறது. இதற்கு இந்திய அரசாங்கம் 50.லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது என்று தெரிவித்தார். இயற்கை விவசாயத்தின் மூலமாக அரசு பள்ளி படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் முட்டை.பால். காய்கறி. பழம் வகைகள் வளர்த்து கொடுப்பேன்.
மேலும் நான் விவசாயி. யாராவது தினமும் தோட்டத்தில் விவசாய வேலை செய்த வேன். யாராவது பொதுமக்கள் முதலமைச்சரை எங்கே என்று கேட்டால் பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல அளவிற்கு விவசாயம் செய்து காட்டுவேன். மேலும் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளை கவனிக்காத மகன்களுக்கு ரேசன்கார்டு, மின் இணைப்பு, கல்வி சான்று, எரிவாய் இணைப்பு ஆகியவற்றை ரத்து செய்து வாழத் தகுதியற்றவன் என்று குடியுரிமையை ரத்து செய்வேன் எனக்கூறினார்.
இதையும் படிங்க: ராமதாசை பற்றி அப்படி பேசாதீங்க..! 85 வயசுலையும்... மனம் திறந்த சீமான்..!!