தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வழிகாட்டுதலின் கீழ், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு மற்றும் போதை பொருட்களை தடுக்க தவறியதாகவும் தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் தவெக தலைமை கழக நிர்வாகிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநில செயலாளர் ஆனந்த், கொள்கைப் பரப்புக் குழு செயலாளர் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நினைத்தபோது திமுக குடும்பம் மிரட்டியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு..! தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்... தவெகவினர் கண்டன முழக்கம்..!!
அரசியலில் ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்று நினைத்த ரஜினிகாந்த்க்கு மிரட்டல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர்களது ப்ரொடக்ஷனிலேயே படம் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் குற்றம் தான் "டெய்லி ஹெட் லைன்"... இதுதான் உங்க "நம்பர் ஒன்" சாதனையா சிஎம் சார்? கொந்தளித்த அருண்ராஜ்..!!