பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசை காங்கரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை நேரில் சந்தித்து பேசியுள்ளது கூட்டணி குறித்து பேசுவதற்காகவா என்பது எனக்கு தெரியாது யூகத்தின் அடிப்படையில் அதற்கு பதில் சொல்ல இயலாது என்றும், மேலும் மரியாதை நிமிர்த்தமாக தனிப்பட்ட முறையில் மருத்துவர் ராமதாசை சந்தித்ததாக செல்வ பெருந்தகையே தெரிவித்துள்ளாரே என்றும் சிதம்பரம் பாராளுன்ற உறுப்பினரும் வி.சி.க தலைவருமான தொல்திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக் குட்பட்ட மேலமாத்தூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்த விசிக தலைவர் தொல்திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அதிமுக பா.ஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் என்று பா.ஜ.க தான் தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை இது குறித்து பேசவில்லை என்றார். மேலும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளதா அல்லது அதிமுக தலைமை யில் தான் கூட்டணியா என்பதை எடப்பாடி பழனிச்சாமி தான் விளக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்.. ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி..!

திமுக கூட்டணியில் பா.ம.க இணையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில்
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசை காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை நேரில் சந்தித்து பேசியுள்ளது கூட்டணிக்காகவா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசை காங்கரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை நேரில் சந்தித்தது கூட்டணி குறித்துபேசுவதற்காகவா என்பது தனக்கு தெரியாது என்றும், மேலும் மரியாதை நிமிர்த்தமாக தனிப்பட்ட முறையில் மருத்துவர் ராமதாசை தான் சந்தித்ததாக அவரே தெரிவித்துள்ளாரே என்றும் தொல் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். அத்துடன் பா.ம.க - வில் தற்போது நிலவும் குழப்பம் தந்தை மகனுக்கிடையிலான ஒன்று அதை அவர்களே தீர்த்து கொள்வார்கள் அது குறித்து பேசுவது சரியல்ல என்றார்.
இதையும் படிங்க: இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!