அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மீது மக்களின் நம்பிக்கை கணிசமாக சரிந்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு, அவரது செல்வாக்கு தொடர்ந்து கவனிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது அது புதிய குறைந்த அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.
நடத்திய கருத்துக்கணிப்பில், டொனால்டு டிரம்ப் (Donald Trump)அவர்களின் ஆதரவு விகிதம் 40 சதவீதமாக பதிவாகியிருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய கணிப்பில், இந்த விகிதம் மேலும் குறைந்து 36 சதவீதமாக சரிந்துள்ளது. இரண்டாவது பதவிக்காலத்தில் அவர் எதிர்கொள்ளும் மிகக் குறைந்த ஆதரவு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள், அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த போர் நடவடிக்கைகள் நீடித்துவரும் நிலையில், அதன் பொருளாதார விளைவுகளும் நேரடியாக மக்களை பாதித்து வருகின்றன.
இதையும் படிங்க: சவுதி இளவரசர் ஒரு போர் வீரன்! புகழ்ந்து தள்ளும் ட்ரம்ப்!! ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்ப்பு! பாக்., மத்தியஸ்தம்!

போர் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவே டொனால்டு டிரம்ப் (Donald Trump) அவர்களின் ஆதரவு விகிதம் குறைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு கொள்கைகளில் கடுமையான நிலைப்பாடு எடுத்துள்ளதாலும், உள்நாட்டு பொருளாதார சவால்களை சமாளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களாலும் மக்கள் மனநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில், போர் சூழ்நிலையும் அதன் பொருளாதார தாக்கங்களும் இணைந்து, அமெரிக்க அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கி வருகின்றன. எதிர்காலத்தில் இந்த ஆதரவு விகிதம் மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயரும் என்பதில் அரசியல் வட்டாரங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: BREAKING! 48 மணிநேரம் கெடு!! ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால்?!! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!