சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வெற்றிக்கு பின்னணியில் இருந்து முக்கிய பங்கு வகித்த ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, திடீரென கட்சி நிகழ்வுகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவின் பிரம்மாண்ட வெற்றிக்கு ஜான் ஆரோக்கியசாமியின் துல்லியமான திட்டமிடலும் ஆலோசனைகளுமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. வாக்குச்சாவடி மட்டம் முதல் சமூக ஊடகப் பிரச்சாரம் வரை அனைத்தையும் அவர் மாஸ்டர் பிளானாக வடிவமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்சியை இரண்டு ஆண்டுகளில் ஆட்சிக்கு கொண்டு வர உதவிய அவரது உத்திகள் பெரும் பாராட்டைப் பெற்றன.
இதுவரை பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாத ஜான் ஆரோக்கியசாமி, பின்னணியில் இருந்து செயல்படும் ஆலோசகராகவே அறியப்பட்டவர். பிரஷாந்த் கிஷோர் போன்ற சிலரைத் தவிர, பெரும்பாலான அரசியல் ஆலோசகர்கள் வெளியே வருவதில்லை. ஆனால் தற்போது ஜான் ஆரோக்கியசாமி இந்த வழக்கத்தை மாற்றி, நேரடியாக கட்சி நிகழ்வுகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயை மிஞ்சும் மூவர் அணி! தவெக பவர் சென்டர்கள்?! உளவுத்துறை அதிகாரிகள் அப்செட்!
நேற்று மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோரை தவெக தலைவர்கள் சந்தித்தபோது ஜான் ஆரோக்கியசாமியும் கலந்து கொண்டார். வைகோ அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றார். இது அவரது முதல் பொது அரசியல் நிகழ்வாகும்.

இந்த திடீர் தோற்றம் ஜான் ஆரோக்கியசாமி நேரடி அரசியலில் ஈடுபடத் தயாராகிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அரசியல் ஆலோசகர் பாத்திரத்தைத் தாண்டி, பதவிகளை நோக்கி நகர்கிறாரா என அரசியல் பார்வையாளர்கள் விவாதித்து வருகின்றனர்.
மேலும், காங்கிரஸ் கட்சி அவரை தேசிய அளவில் ஆலோசகராக அழைத்துள்ளதாகவும், முதல்வர் விஜய் அதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் பரவுகின்றன. இந்த சூழலில் ஜான் ஆரோக்கியசாமியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அரசியல் களம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.
தவெகவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஜான் ஆரோக்கியசாமியின் செயல்பாடுகள் இனி எப்படி இருக்கும் என்பது தமிழக அரசியலை பாதிக்கும் முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியில்லை! கசிந்ததது அறிவாலய தகவல்!! அடுக்கும் காரணங்கள்!