கட்சி தொடங்காத காலத்திலிருந்து 20 ஆண்டுகாலம் விஜய்க்காக உழைத்த என் மகனுக்கு, தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை, மன உளைச்சலில் இருக்கிறோம்-பாப்பாரப்பட்டியில் தவெக எம்எல்ஏ-விடம் வாக்குவாதம் செய்த நகர செயலாளர் தாயார் வேதனை.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த பிறந்தநாள் விழாவில் பென்னாகரம் எம்எல்ஏ எஸ்.கஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் என்பவரின் தாய் முனியம்மாள் திடீரென அங்கு வந்து எம்எல்ஏ-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நகரப் பகுதியில் இவ்வளவு பெரிய பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் நிலையில், எனது மகன் ரமேஷுக்கோ அல்லது மற்ற கட்சி நிர்வாகிகளுக்கோ இதுகுறித்து எந்தவொரு முன்னறிவிப்போ, தகவலோ தெரிவிக்கப்படவில்லை" என்று அவர் சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அங்கிருந்து சிலர் நகர செயலாளர் ரமேஷின் தாய் முனியம்மாவை தடுத்தனர்.
இதையும் படிங்க: சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!
இந்த நிலையில் தவெக பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ், 3 வருடமாக நான் கட்சியில் கடுமையாக உழைத்து உள்ளேன். எந்த ஒரு நிகழ்ச்சியும் என்னை அழைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். என்னை நகர செயலாளராக மாற்றிவிட்டு மணி என்பவரை அறிவித்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். என் குடும்பம் பிள்ளைகள் எல்லாம் பெங்களூரில் இருக்கிறார்கள் நான் பாப்பாரபட்டியில் இருக்கிறேன். இது எல்லோருக்கும் தெரியும். மன உளைச்சலில் நான் சாகப் போகிறேன். என் சாவுக்கு காரணம் இவர்கள்தான் என்று பேசி ஆடிய ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பாப்பாரப்பட்டி தவெக நகர செயலாளர் ரமேஷின் தாய் முனியம்மாள், கட்சி தொடங்காத காலத்திலிருந்து என் மகன் என் குடும்பத்தினர் இந்த விஜய்க்காக உழைத்துக் கொண்டிருந்தோம். கடந்த தேர்தலில் ஆண்களுக்கு மத்தியில், பல எதிர்ப்புகளை தாண்டி நானும் தவெக வெற்றி பெற வேண்டும் என உழைத்தேன். என் மகன் சொத்து முழுவதையும் விற்பனை செய்து, மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை கொடுத்தார்.
வயதான பாட்டிக்கு வீடு கட்டித் தருவது, நன்றாக படித்த பிள்ளைகளுக்கு உதவி செய்வது, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் என் மகனை ஒதுக்கி விட்டு, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை வைத்து விழா நடத்துகிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். என் மகன் மன உளைச்சலால் கடந்த 10 நாட்களாக பெங்களூர் சென்றுள்ளார். போன் செய்தால் கூட எடுப்பதில்லை. இதைத்தான் நான் எம்எல்ஏ உடன் கேட்பதற்கு கேட்டேன். ஆனால் அவரை கேட்க விடாமல் அருகில் இருந்தவர்கள் என்னை பிடித்து தள்ளி விட்டார்கள். இந்த மன உளைச்சலில் என் மகன் விஷ மருந்து தற்கொலை செய்து கொள்வதாக ஆடியோ அரீப்பியிருக்கிறார். ஆனால் இங்க உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதனால் சொத்து, பணம் எல்லாத்தையும் நாங்கள் இழந்து நிற்கிறோம் என வேதனையோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!