118 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையை நிரூபிக்க போராடிய தவெக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைத்ததில் இருந்தே சர்ச்சைக்கு குறைவில்லாமல் இருந்து வருகிறது.
யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆட்சியை பிடித்த தவெக சொல்லிக் கொள்ளும் வகையில் திட்டங்களை அறிவிக்காவிட்டாலும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இரண்டு முறை பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது, தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் மோகத்துடன் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் வலம் வருவது, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் ஓட்டுக்காக பரப்பிய பொய்கள் என அடுத்தடுத்து பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் அரசு ஆலோசராக நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனால் அந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில் முதலமைச்சரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?
அரசியல் விவரங்களுக்கான ஆலோசகராக தவெகவின் வியூக வகுப்பாளராக பணியாற்றிய ஜான் ஆரோக்கியசாமி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட விவரங்களுக்கான ஆலோசகர்களாக விஜயின் நெருங்கிய நண்பர்விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ராதன்பண்டிட் நியமனம் சர்ச்சையான நிலையில், விஜய்க்கு நெருக்கமான இருவருக்கு அரசு பொறுப்பு வழங்கப்படுவது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
இதையும் படிங்க: முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!