தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீனிவாசன். வில்லனிசத்தில் மிரட்டும் இவருக்கு பெயர் பெற்று கொடுத்தது என்னவோ திருப்பாச்சியில் சனியன் சகடை கதாபாத்திரமும், சாமியில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரமும் தான். அந்த அளவிற்கு அவரது பேச்சு, மிரட்டும் ஸ்டைல் மக்கள் மனதில் நன்கு பதியவைத்தது.

அது தவிர தமிழில் கோ, சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, சாமி 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் கோட்டா ஸ்ரீனிவாசன். இவர் 1978 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் பிராணம் கரீது என்ற படத்தில் அறிமுக அறிமுகமானார். திரை பயணத்தில் வில்லன், துணை நடிகர் என 750 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், ஆந்திர அரசால் வழங்கப்படும் நந்தி விருதினை ஒன்பது முறை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: அரசின் அலட்சியமே ஒரு உயிர் போக காரணம்.. திமுகவை பந்தாடிய நயினார் நாகேந்திரன்..!
மேலும் திரையுலகில் கோட்டா ஸ்ரீனிவாசனின் பங்களிப்பிற்காக 2015 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இந்தியன், நரசிம்மா, பாபா, சிவாஜி ஆகிய தமிழ் படங்களின் தெலுங்கு டப்பிற்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் இரண்டு படங்களில் பாடவும் செய்திருக்கிறார்.
வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்த கோட்டா ஸ்ரீனிவாசன், ஜூலை 13-ஆம் தேதியான இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே காலமானார். அவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் திரையுலகினர் பலர் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு, நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் பிரகாஷ்ராஜ், முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் நேரில் சென்று மறைந்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவிற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த கோட்டா ஸ்ரீனிவாசராவ் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், அரசியல்வாதியாகவும் வெற்றி முத்திரை பதித்தவர். இன்று காலை அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், தன் தந்தை போல, மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு கண்டு, பின்பு நடிப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர்தான் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் எனவும் கூறினார்.
மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என எந்த மொழியில் நடித்தாலும் அந்த மாநிலத்துக்காரராகவே ரசிகர்கள் உணரும் வகையில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவரான இவர், நடிகராக மட்டுமின்றி, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில், பாஜக சார்பில், 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவரது மறைவு, நமக்கு பெரும் இழப்பு, அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேடிக்கை பாக்குறது மட்டும்தான் வேலையா? முதல்வர் ஸ்டாலினை விளாசிய நாயினார்..? அடுக்கும் கேள்விகள்..!