அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி. வீரமணி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாக களமிறங்கும் அவர், 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீரமணி, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.
அதன்பின் 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று, இரு முறை அமைச்சர் பொறுப்பு வகித்தார். முதலில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், பின்னர் பள்ளிக்கல்வித் துறைக்கு மாற்றப்பட்டார். 2016இல் மீண்டும் வெற்றி பெற்றபோது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும் 2021 தேர்தலில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதே தொகுதியில் திமுகவின் கே. தேவராஜிடம் வெறும் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டார். ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி வீரமணி போட்டியிடும் நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடந்து வருகிறது. அவரது மனு மீது புகார் தெரிவிக்க சிலர் வருகை தந்துள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!
கே.சி. வீரமணி பிரமாண பத்திரம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்க வந்த நபர்களை கே.சி வீரமணியின் ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் மனு ஏற்பு..! கையெழுத்து போட்ட வழக்கறிஞரே உயிரோட இல்ல.. போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்..!!