விமானப்படை அதிகாரியின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் நடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது கணவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த அய்யாஸ் மதார் என்பவர், நிலம் வாங்குவது தொடர்பாக கடந்த ஆண்டு அவரை ஒரு ஓட்டலில் சந்தித்துள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாகவும், அதனை குடித்த பின்னர் பெண் மயக்கமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அதிகரிக்கும் வறுமை!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்ற கொடுமை!

இதனைத் தொடர்ந்து, அவரது அனுமதியின்றி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவற்றை காட்டி மிரட்டி பல லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலின் மூலம் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மே 31-ஆம் தேதி, அய்யாஸ் மதார் மற்றும் அவரது கூட்டாளி அமீன் ஷேக் ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்று, அவரது விருப்பத்திற்கு மாறாக மதமாற்றம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் வலுக்கட்டாயமாக திருமணமும் நடத்தப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு பயம் காரணமாக யாரிடமும் தெரிவிக்காத அந்த பெண், பின்னர் தனது கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அய்யாஸ் மதார் மற்றும் அமீன் ஷேக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஹஸ்ரத் மவுலானா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள சில வீடியோக்களும் விசாரணையின் ஒரு பகுதியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உயர்ரக கஞ்சா கடத்திய Mrs கேரளா அழகி! 'ஹைட்ரோபோனிக் வீட்'!! விலை ரூ.11.82 கோடிக்கும் அதிகமாம்!!