தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்திருந்தார்.
தவெக தலைவர் விஜய் இதில் நேரடியாக பங்கேற்று, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக மகளிர் நலனுக்கான முக்கிய திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த விழா QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு மூலம் மட்டுமே அனுமதி அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், மார்ச் 8 அன்று அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழாக்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இது பெண்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது. இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் அமீர் இந்த தவெக மகளிர் தின விழாவை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் அவர் தனது கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ‘ஓ.கே.’ சொன்ன சங்கீதா... விவாகரத்து வழக்கு வாபஸ்?!... பின்னணியில் இருக்கும் 2 காரணங்கள் இதுவே...!
அவர் கூறியதாவது, “மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா என்னும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை “கேவலமான நிகழ்ச்சி” என சுட்டிக்காட்டி, வீட்டில் உள்ள பெண்களை மதிக்காமல் வெளியில் மகளிர் தின கொண்டாட்டம் நடத்துவது என்ற போலித்தனத்தை விமர்சித்துள்ளார்.
இயக்குநர் அமீரின் இந்த கருத்து தவெகவின் மகளிர் நலன் சார்ந்த அரசியல் நகர்வுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் காலகட்டத்தில் மகளிர் ஓட்டுகளை ஈர்க்கும் முயற்சியாக இந்த விழா பார்க்கப்படும் சூழலில், அவரது விமர்சனம் “வீட்டு பெண்களை புறக்கணித்து வெளியில் கொண்டாட்டம்” என்ற கோணத்தில் கடுமையானதாக இருந்தது. இது திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: “Mr.விஜய்... உதயநிதி கிட்ட போய் ட்ரெயினிங் எடுங்க...” - திமுகவில் இருந்து பறந்த வந்த அட்வைஸ்...!