முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் போலீசார் உடனடியாக கைது செய்தனர். திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் வைத்து அதிரடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பட்ட காவல்துறையின் வாகனத்தை மறித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கைது நடவடிக்கையின் போது சொந்த வாகனத்தில் செல்வதாக அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய நிலையில் போலீசார் அதனை ஏற்க மறுத்து காவல்துறை வாகனத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

முன் ஜாமின் ரத்து செய்யப்பட்ட 90 நிமிடத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்யாவிட்டால் மோதல் போக்கை ஏற்பட்டிருக்கும் என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசி இருக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில் முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டிருந்தது. அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்வதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பியும் போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: "கட்சியை காப்பாற்ற களமிறங்கிய எடப்பாடி"..! தோல்விக்கு என்ன காரணம்..? EPS முக்கிய ஆலோசனை..!!
இரட்டை அர்த்தமுள்ள கிராமத்து பழமொழிகளையும், முதல்வரின் பேச்சு, முகபாவனை, உள்ளிட்டவற்றையும் கூறி அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது திமுக வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் ஆத்தூரில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனாவின் கரூர் கணக்கு..! சட்டப் போருக்கு தயாராகும் திமுக..! சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு..!!