தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார். 2026 ஜூன் 2 அன்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அளித்த அவர், ஜூன் 5 அன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாமலை ஒரு "புதிய அரசியல் இயக்கத்தை" தொடங்க உள்ளதாகவும், அதை பின்னர் ஒரு பிராந்திய கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அண்ணாமலை தனது ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தில் மற்றும் தனது அறிக்கையில், தமிழகத்துக்கான அரசியல் அணுகுமுறை குறித்து கட்சியின் மூத்த தலைமையுடன் தனக்கு உள்ள கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 18 மாதங்களாக இந்த முரண்பாடுகள் இருந்து வந்ததாகவும், தமிழகத்தில் சுயேச்சையான வளர்ச்சியை வலியுறுத்திய அவர், கூட்டணி அரசியலால் கட்சி பின்னடைவை சந்தித்ததாகக் கூறியுள்ளார். இதற்கிடையில், தான் புதிய இயக்கத்தை கடனாக இருப்பதாக அவர் அறிவித்தார். WE THE LEADER என்ற தலைப்பில் கட்சியில் சேர்வதற்கு லிங்க் கொடுத்தார். www.wetheleader.org என்ற இணையதளத்தின் வாயிலாக தங்கள் இயக்கத்தில் இணையலாம் என்று அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: சரித்திரமே இல்லை... மண்ணை அள்ளி தூற்றாத குறையாக அண்ணாமலைக்கு சாபம் விட்ட ஹெச்.ராஜா...!
இந்த நிலையில் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நமது அமைப்பில் இதுவரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர். சரியான பாதையில் நமது இயக்கம் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்தில் இருந்து அக்டிவிட்டி அதிக அளவில் இருக்கும் என்றும் இந்த இயக்கம் பொய் சொல்லாது என நம்பி வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: யாரை ஏமாத்துறீங்க..? GREEN MAGIC பால் தட்டுப்பாடு..! அண்ணாமலை தாக்கு.!