கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை நான் முதல்வன் திட்டம் எனக் கூறி திமுக நிகழ்ச்சிக்கு வர திமுக கவுன்சிலரின் கணவர் வற்புறுத்தி இருப்பதாக தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் கூறி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர அந்தப் பகுதியில் திமுக கவுன்சிலரின் கணவர் வற்புறுத்தி இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: புல்லட் பாண்டி.. அழுத்தமா அடிங்க.. முதலமைச்சரை கிண்டல் அடித்த அண்ணாமலை!!

ஏற்கெனவே, கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் திமுக அரசு நடத்தி வருவதாகவும், பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை, வன்மையாகக் கண்டிப்பாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்காக பள்ளி மாணவர்களை அழைத்து வந்து நாற்காலிகளை தூக்க வைத்தது பெற்றோர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. வேலை ஆட்களைப் போல் அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்தக் கூடாது என்ற வலியுறுத்தலும் முன் வைக்கப்படுகிறது. இருப்பினும் ஆங்காங்கே நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் அரசு பள்ளியில் மாணவர்களை படிக்க வைக்கும் பெற்றோரை நெருடச் செய்துள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள்.. மார்தட்டி பெருமிதத்துடன் வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!