தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் சார்பில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணி தொடக்க விழா நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் நடைபெற்றது.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று காணொளி காட்சி மூலம் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியையும் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார், நெல்லையப்பர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மூத்த குடிமக்கள் உறைவிடும் கட்டும் பணியின் அடிக்கல் நாட்டும் விழா மேளதாளம் முழங்க நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, திமுக இரட்டை வேடம் போடுவதாக பவன் கல்யாண் ரெட்டி கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, தமிழக முதல்வர் எப்பொழுதும் இரட்டை வேடம் போடுவதில்லை. வேடம் போடுவது நடிகர்களுக்கு உரியது. மக்களுக்கு தேவையானதை தமிழக முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: #BREAKING: இபிஎஸ்க்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை... முதல்வர் ஸ்டாலின் காட்டம்

தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் 3000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி திருச்செந்தூர் கோயிலில் பணிகள் செய்யப்பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. 7000 கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து இந்து அறநிலையத்துறை மீட்டுள்ளது. சட்டமன்ற விதிகள் படி எப்போது எதையெல்லாம் ஒளிபரப்பு செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம்.

சில சமயங்களில் அரசியலுக்காக சிலர் எதையோ பேசி விடுகின்றனர் அது வெளியில் இருப்பவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றது. இதற்கெல்லாம் ஒரு பயிற்சி கொடுத்து அதன் பிறகு ஒரு நல்ல முடிவு தீர்வு கிடைக்கும்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு இப்படியொரு மவுசா?... பாஜக, அதிமுக தலையில் இறங்கியது இடி...!