இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தனது தனித்துவ இசையால் கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என எல்லா பகுதிகளிலும் சிறப்பை நிலை நாட்ட தவறியதே இல்லை என்று கூறலாம். இசை மீது இவர் கொண்ட பற்று, ஒரே மேடையில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற சாதனையையும் படைக்க செய்துள்ளது.
இசைப்புயல் என்னும் பலராலும் போற்றக்கூடிய ஏ.ஆர். ரகுமான், ஆஸ்கர் விருது, கிராமிய விருது, அகடமி விருது, கோல்டன் குளோபல் விருது, தேசிய விருது என விருதுகளை அடுக்கடுக்காக தன்வசப்படுத்தி வருகிறார். காதல், தேசம், நட்பு, தாய்ப்பாசம் என எதுவாக இருந்தாலும் சரி, தன் இசையால் உயிர் கொடுத்து படத்தில் கதாபாத்திரங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கிறார் என்றே சொல்லலாம்.

திரை வாழ்விலும், குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சிகரமாக பயணித்த நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவரது மனைவியுடன் விவாகரத்து செய்ய முயல்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: களைக்கட்டியது ஹோலா மொஹல்லா பண்டிகை! வீர சாகசம் செய்த சீக்கியர்கள்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், பல தரப்பினர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாகவும் கை கொடுக்கும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் சென்னையில் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திடீர் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை முறை அளிக்கப்பட்டு தொடர்ந்து அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்களில் வெளியாகி உள்ளன. இந்தத் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பிரார்த்தனையை கையில் எடுத்த வருகின்றனர்.
இதையும் படிங்க: காமாலை நோய் பிடித்த அண்ணாமலைக்கு கண்டதெல்லாம் மஞ்சள்… சேகர் பாபு பதிலடி..!