அன்புமணி பொறுப்பேற்ற பிறகு பாட்டாளி மக்கள் கட்சி சரிவை மட்டுமே சந்தித்தது என சேலத்தில் சட்டமன்ற உறுப்பினர் அருள் கடும் விமர்சனம்.
சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் , ராமதாஸ் ஆதரவு பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளருமான அருள் என்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறும் போது, பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி A பார்ம்,B ஃபார்ம் கையெழுத்திடுவது நான் தான் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாமகவை திருட முயற்சி... அன்புமணி மீது ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு... 180 பக்க ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார்...!
வாழ்நாளில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை பாமக-விற்காக அர்ப்பணித்து இயக்கத்தை உருவாக்கியவர் அய்யா ராமதாஸ்.. கட்சியை துவங்கிய நாளிலிருந்து யாருடைய தலையிடும் இல்லாமல் 2006 வரையிலும் செயல்பட்டார் .
ஆனால் அன்புமணி தலையிட்டுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டிய அருள் , பாமக துவங்கியதில் இருந்து இன்று வரை 55 சட்டமன்ற உறுப்பினர்கள், 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐந்து மத்திய அமைச்சர்களை பெற்றுக் கொடுத்தவர் ராமதாஸ் தான்.. எனவே பாமக-வை ராமதாஸ் அவர்களை தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அன்புமணியின் தலையீட்டுக்கு பின், பாட்டாளி மக்கள் உயரவே இல்லை.
வெறும் மூன்று எம்எல்ஏ , அதன் பின் ஜீரோ என பாமக கட்சி கீழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதன் பிறகு தான் பாமக என்ற கட்சி அங்கீகாரத்தை இழந்தது. பாமக கட்சி தன்னுடையது என்று அன்புமணி கூறினால் , அது ராமதாஸ்-ன் உழைப்பே திருடுவதற்கு சமம்.
மகன் என்பதற்காக ராமதாஸ் அய்யாவின் உழைப்பை திருட முடியாது. என்னைப் பொறுத்தவரை பாமக துவங்கியதில் இருந்து, வேறு எந்த கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை, ஆனால் வழக்கறிஞர் பாலு , திமுகவிலிருந்து , மாதிமுக , பின்னர் குரு அவர்களிடம் சென்கால். அப்படி பல்வேறு கட்சிகளுக்கு சென்று இப்பொழுது பாமகவில் இணைந்து கட்சியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறார் பாலு.
தீய சக்தியும் , கைக்கூலியும் வழக்கறிஞர் பாலு போன்றவர்கள் தான். தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்பது தவறு இல்லை. ஆனால் தவறான உதாரணமாக அன்புமணி மாறிவிடக்கூடாது என்பதற்காக தான் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாழப்பாடி அருகே நடந்த தாக்குதல் விவகாரத்தில் காவல்துறையில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் , அதற்கு பயந்து தான் போலீஸ் , என் மீது ஒருதலைப்பட்சமாக எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.
என்னை கத்தி , கட்டையை எடுத்து வந்து தாக்குதல் நடத்திய வீடியோ, கற்களை கொண்டு தாக்கிய காட்சிகளை ஆதாரமாக கொண்டு தான் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் , என அதற்கான ஆதாரத்துடன் கூடிய போட்டோக்களை பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் காண்பித்தார்.
முக்கியமான குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள். உண்மையான குற்றவாளி யார் என்று காவல்துறைக்கு தெரியும் வீடியோ எடுத்து உள்ளார்கள். ஆனால் முக்கிய குற்றவாளிகள் 10 பேரை இதுவரை கைது செய்யவில்லை.
கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்புகிறேன் என்று கூறினார். காவல் துறைக்கு நீங்கள் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, அன்புமணியிடம் தான் நிறைய பணம் உள்ளது , ராமதாஸ் அவர்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை வைத்துள்ளார். ஆனால் எங்களிடம் எல்லாம் பணம் இல்லை என்றார்.
தேர்தல் ஆணையத்தில் மாம்பழ சின்னம் எனக்கு தான் என்று கொக்கரிப்பது எல்லாம் பொய்யானது. ஜிகே மணி தலைவராக இருந்தபோது கையெழுத்து போட்டார்.. இப்பொழுது அவரது பதவி காலம் முடிந்துவிட்டது.. இப்பொழுது ராமதாஸ் ஐயா , தான் தலைவர் தலைவராக கையெழுத்திடுவார்.
தர்மபுரி, சேலம்,.ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்தை கூட்டியபோது ஏராளமான இளைஞர்கள் கூட்டம் எங்களிடம் வந்தது. பொறுப்பாளர்கள் சிலர் அன்புமணியின் பின்னால் போய் இருக்கலாம்; பாட்டாளி மக்கள் கட்சி என்பது ராமதாஸ் பின்னால் தான் உள்ளது.
ராமதாஸ் ஐயா யாரை சொல்கிறாரோ, அவருக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் சத்தியம் என்றார். நிறைவேற்றப்படாத தீர்மானத்தை பொய்யாக கொடுத்து முகவரியை மாற்றியுள்ளார்கள். அதில் தலைவர் அன்புமணி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் , சட்டரீதியாக எதிர்கொள்வோம். நீதி, நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
ராமதாஸ் அவர்கள் போட்டியிட எனக்கு சீட்டு வழங்கினார். பாலுவுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் இதில் பாலுவை அங்கீகரிக்காமல், அவரை மக்கள் துரத்தி விட்டார்கள். அதிக வாக்குகளை கொடுத்து என்னை வெற்றி பெற மக்கள் செய்தார்கள்.
எனவே என்னை பதவியில் இருந்து நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை என சட்டமன்ற உறுப்பினர் அருள் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி இணைவு ... உண்மையை போட்டு உடைத்த கணேஷ் குமார்...!