தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன.
இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார்.

இந்த தனித் தீர்மானத்தை திமுக ஆதரித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனி தீர்மானத்தின் மீது முன்னாள் அமைச்சர் கோவிச்செழியன் உரையாற்றினார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம் என்று சொல்லும் போது அவமானமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது என வேதனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர் கருணாநிதி என்று தெரிவித்தார். தமிழ்த்தாய் தமிழ் மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாகியவர் கலைஞர் கருணாநிதி என்றும் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்தை திமுக ஆதரிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக–பாஜக திடீர் நெருக்கம்?! முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை கூட்டம் கூட்டியதன் பின்னணியில் பரபரப்பு!