பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் திராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல். தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது.
ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பாஜக தங்களது கொள்கை எதிரி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து கோரி வருகிறார். நேற்று நடந்த தமிழக வெற்றி கழகம் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் தமிழக வெற்றி கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையில் தான் போட்டி என்று கூறியிருந்தார்.

இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார். தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திற்கு பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இதையும் படிங்க: டைம் தான் வேஸ்ட்... அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட்...!
திருப்பூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2026 இல் தங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதிப்பட கூறினார். நேற்று நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் தமிழக வெற்றி கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தான் போட்டி என்று பேசி இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், பாஜக எவ்வளவு பெரிய கட்சி என்று ஜெயிக்க தெரியாது என்று கூறினார். அதனால்தான் இவ்வாறு பேசி வருகிறார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொம்பு முளைச்சிருக்கா? ஒருமையில் பேசி செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை...!