பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு 7 கோடி வாக்காளர் இருக்கின்ற அந்த மாநிலத்தில ஏறத்தாழ ஒரு 67% வாக்குகள் பதிவாகி இருந்தன. பீகாரில் இருக்கக்கூடிய இந்த 38 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 46 மையங்களிலும் இந்த 67 சதவீத வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி உள்ளார். பீகாரைப்பொறுத்தவரை பெண்களுடைய வாக்குகளை யார் பெறுகின்றார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு எழுதப்படாத விதியாக இருக்கிறது.

ஏறக்குறைய ஒரு கோடி 40 லட்சம் பெண்கள் மட்டும் மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கின்றார்கள். இதுவரை பெண்களுடைய வாக்குகள் நிதீஷ் குமாருக்கு மட்டுமே பதிவாகி வந்ததால், கடந்த ஒரு ஏறக்குறைய 20 ஆண்டுகளாக பீகாரினுடைய அசைக்க முடியாத முதலமைச்சராக நிதீஷ் குமார் இருந்து வருகின்றார். இந்த நிலையில், எங்களது எதிர்பார்ப்பின்படி தான் செல்கிறது என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் துஹின் ஏ. சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போட்றா வெடிய...!! பீகார் தேர்தலில் செஞ்சூரி விளாசிய பாஜக... வரலாறு காணாத முன்னிலை...!
ஜங்கிள் ராஜுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் மகளிர் மற்றும் இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் என்றும் பீஹாரை நேபாள், வங்கதேசம் போல மாற்ற RJD முயற்சிப்பது மோசமானது எனவும் தெரிவித்தார். நாங்கள் 160–170 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பீகார் அரியணையில் ஏறப்போவது யார்?... ஆர்ஜேடி Vs பாஜக வேட்பாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ...!