செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு, தற்போது காவல்துறையின் செயல்பாடுகளால் பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்ற வேண்டிய சட்டத்தின் காவலர்கள், ஆளுங்கட்சியின் கைபாவையாகச் செயல்படுகிறார்களா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசேனா பிரமுகர் தாமோதர பெருமானை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், அவரை மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த விதம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது
ஒரு கொடூரமான குற்றவாளியை அழைத்து வர காவல்துறையிடம் அரசு வாகனங்கள் இல்லையா? அல்லது குற்றவாளிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்ட இது திட்டமிட்ட நாடகமா?
இதையும் படிங்க: சிவசேனா நிர்வாகி; சிறையில் ஏற்பட்ட கூடா நட்பு... 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்களின் பகீர் பின்னணி...!
திமுக கலர் கருப்பு சிவப்பு நிறம் கொண்ட எழுத்து போடப்பட்ட காரில் ஒரு காமக்கொடூரனை விசாரணைக்கு அழைத்து வந்தது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கேள்விகள் எழுந்துள்ளன
காவல்துறையினர் ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் வாகனங்களை எதற்காகப் பயன்படுத்த வேண்டும்? இந்த . நீர்த்துப்போகச் செய்ய ஏதேனும் திரைமறைவு வேலைகள் நடக்கிறதா என்ற சந்தேகம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது
குற்றவாளியை ராஜமரியாதையுடன். அழைத்து வருவது போல அரசியல் கட்சி அடையாளமுள்ள காரில் அழைத்து வந்தது காவல்துறையின் நடுநிலைமையைக் கேள்விக்குறியாக்குகிறது என அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
இதையும் படிங்க: பரிகார பூஜை லீலைகள்... சிறுமிகளை சீரழித்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை... சிவகங்கை நீதிமன்றம் அதிரடி....!