புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் முதலமைச்சர் அலுவலகம் புதிதாக அமைய உள்ளது. இது கடலுக்கு எதிரே அமைந்திருக்கும் கட்டிடத்தின் ஒரு பகுதியாகும். தற்போது கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்படும் முதலமைச்சர் அலுவலகம், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கான இடப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இங்கு மாற்றப்படவுள்ளது. அலுவலக இடம், கூட்ட அறை, காத்திருப்பு பகுதிகள் மற்றும் தொடர்புடைய வசதிகள் இங்கு உருவாக்கப்படும்.
இந்த புனரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக பொதுப்பணித் துறை மூன்று தனித்தனியான டெண்டர்களை வெளியிட்டது. பிளாக் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என பிரிக்கப்பட்ட இந்த பணிகளின் மொத்த அரசு மதிப்பீட்டு தொகை ஐந்து கோடியே ஐம்பத்து நான்கு லட்சம் ரூபாய். இதில் பிளாக் ஒன்றுக்கு இரண்டு கோடியே நாற்பத்தொன்று லட்சம், பிளாக் இரண்டுக்கு இரண்டு கோடியே ஒரு லட்சம் மற்றும் பிளாக் மூன்றுக்கு ஒரு கோடியே பன்னிரண்டு லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டது.

பணிகளின் வரம்பு முதலமைச்சரின் பணியிடம் மற்றும் மாநாட்டு அறைக்கான உள்துறை வடிவமைப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.இந்த டெண்டர்களில் சென்னையைச் சேர்ந்த ராசி பில்டர்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த தொகையைக் கூறியுள்ளது. பிளாக் ஒன்றுக்கு ஒரு கோடியே அறுபத்து ஆறு லட்சம், பிளாக் இரண்டுக்கு ஒரு கோடியே முப்பத்தேழு லட்சம் மற்றும் பிளாக் மூன்றுக்கு எழுபத்து நான்கு லட்சத்து தொன்னூற்று நான்கு ஆயிரம் ரூபாய் என மொத்தம் மூன்று கோடியே எழுபத்தெட்டு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் கூறியது. இது அரசு மதிப்பீட்டை விட சுமார் முப்பத்திரண்டு சதவீதம் குறைவானது.
இதையும் படிங்க: சர்ச்சையான முதலமைச்சர் அலுவலக டெண்டர்... 3 டெண்டரையும் தட்டித்தூக்கிய ஒரே நிறுவனம்...!
மற்ற மூன்று நிறுவனங்களும் பங்கேற்றன. ஒரு நிறுவனம் தொழில்நுட்ப மதிப்பீட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் விரைவில் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மாற்றம் நிர்வாக செயல்திறனை அதிகரிக்கும் என்றும், அதே கட்டிடத்தில் பல துறைகள் செயல்படுவதால் கோப்பு பரிமாற்றம் மற்றும் கூட்டங்கள் எளிதாகும் என்றும் கூறப்படுகிறது. வெளிநாட்டு விருந்தினர்கள் வருகையின் போது போதுமான இடம் கிடைக்கும். முதலமைச்சருடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வசதியான சூழல் உருவாக்கப்படும். பணிகள் குறுகிய காலத்தில் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்"... கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து மூலம் சி.எம். விஜய் கொடுத்த மெசெஜ்...!