தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 9ம் தேதி கடலூரில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் அன்று புதுவையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுச்சேரியில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்த வழியாக கடலூர் செல்ல விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தான் கடலூர் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் கடலூரில் பரப்புரை மேற்கொள்ள ஏப்ரம் 11ம் தேதிக்கு அனுமதி கோரப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர்,விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!
பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கடலூர் மஞ்சக்குப்பம், வடலூர், விருத்தாச்சலம் புறவழிச்சாலை, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து வரக்கூடாது, பிரச்சார வாகனத்தின் மீது ஏறக்கூடாது, பொது மக்களுக்கு குடிநீர், மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல் நன்னடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடலூர் பிரசாரம் தற்போது மீண்டும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக தமிழக வெற்றிக்கழகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். பிரச்சாரம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல். மேலும் விஜய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் தான் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் வாகனத்தில் அதிரடி சோதனை..! தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..!!