சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார். இந்த கோவிலுக்கு மதுரையை சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது தனது தாயின் நகையை அஜித்குமார் திருட முயன்றதாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் அஜித் குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் அஜித் குமார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சிறுவன் கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு..!

அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்றத்தில் சீர்கெட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியிருந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சட்டம் ஒழுங்கு டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த வழக்கில் பல்வேறு மர்மம் முடிச்சுகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், வடக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக மேஜிஸ்திரேட் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

நகை திருட்டு புகார் எழுந்ததும் முதலில் அஜித்குமாரை கோவில் ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. கோவில் வளாகத்தில் வைத்து அஜித்குமாரை கோவில் ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில் அஜித்குமார் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் மேஜிஸ்ட்ரேட் வேங்கட பிரசாத் ஆய்வு நடத்தினார். எவ்வளவு நேரம் தாக்குதல் நடந்தது, அஜித் குமாரை தாக்கியவர்கள் யார், என்பது தொடர்பாக அவர் விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: #LOCKUP DEATH: அடிச்சே கொன்னுட்டாங்க! கதறும் உறவினர்கள்.. 6 காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட்..!