தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு எந்த அளவில் உள்ளது? அதனைத் தடுப்பதற்கு மருத்துவர்கள் என்னென்ன அறிவுரைகளை வழங்குகின்றனர் என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெங்கு பிடியில் தமிழகம்? கிடுகிடுவென உயரும் எண்ணிக்கை..!! ஒரே நாளில் 244 பேருக்கு தொற்று!!
அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில்தான் அதிக அளவிலான டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்றைய தினம் வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், நேற்று வரை 16,830 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 3,476 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செப்டம்பர் 18ஆம் தேதி வரை 3,096 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்திற்கு முன்பு வரை 1,200, 1,300 என்ற அளவில் இருந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை, ஜூலை மாதம் முதலே 2,000-ஐ கடந்துள்ளது.
ஜூலை மாதத்தில் 2,339 பேருக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 3,476 பேருக்கும், செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வரை 3,096 பேருக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏழு நாட்களைப் பார்க்கும்போது, செப்டம்பர் 14ஆம் தேதி 61 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி 133 பேருக்கும், 16ஆம் தேதி 283 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த மாதத்தில் பதிவான அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாக உள்ளது.
17ஆம் தேதி 244 பேருக்கும், 18ஆம் தேதி 253 பேருக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் 10 மாவட்டங்களைப் பார்க்கும்போது, சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.
டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களில், ஊரகப் பகுதிகளில் 13,000 பேரும், நகர்ப்புறப் பகுதிகளில் 11,500 பேரும் என மொத்தம் 25,000-க்கும் மேற்பட்டோர் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட உள்ளனர்.
மேலும், காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உஷார் மக்களே.! வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் 240 பேருக்கு தொற்று உறுதி..!!