திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடையாறு, திருவான்மியூர், அண்ணாநகர், ஆரியபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் கே.என். நேரு. அவரது சகோதரர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் காலை முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஆரியபுரத்தில் உள்ள அவரது சகோதரரின் அலுவலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அடையாறு, திருவான்மியூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களுடன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் வழக்குகள் இருக்கக்கூடிய நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரியபுரத்தில் உள்ள டிவிஎச் அலுவலகத்திலும் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனைகள் தொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கே.என். நேருவின் சகோதரர் மற்றும் கே.என். நேருவுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் கூடுதல் இடங்களிலும் சோதனை நடத்தப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.