• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேனி இரட்டைக் கொலை: மனைவி மற்றும் மைத்துனரை கொன்ற அமமுக நிர்வாகி தலைமறைவு!

    தேனியில் நடைபெற்ற இரட்டைக்கொலை வழக்கில், மைத்துனரையும் கொடூரமாக வெட்டிக் கொன்ற அ.ம.மு.க. நிர்வாகி பிரதீப் தலைமறைவான நிலையில், DSP சுனில் தலைமையிலான மூன்று தனிப்படைகள் அமைத்துக் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
    Author By Thenmozhi Kumar Thu, 11 Dec 2025 19:24:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Double Murder in Theni: AMMK Functionary Pradeep Absconding After Hacking Wife and Brother-in-law

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியில் இன்று நடந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக அ.ம.மு.க. ஒன்றியப் பொறுப்பில் உள்ள பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் இருவரும் சேர்ந்து, பிரதீப்பின் மனைவி நிகிலா மற்றும் அவரது மைத்துனர் விவேக் ஆகியோரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

    தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சேர்ந்த பிரதீப் (27), அவரது தந்தை சிவக்குமார் இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றியப் பொறுப்பில் உள்ளனர். பிரதீப் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டு, பல வழக்குகளில் சிக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன் சின்னமனூரைச் சேர்ந்த நிகிலாவைத் திருமணம் செய்த பிரதீப்புக்கும், நிகிலாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    பிரதீப்பின் கொடுமை காரணமாக ஒரு மாதமாகப் பிரிந்து தாயார் வீட்டில் வசித்துவந்த நிகிலாவை, உறவினர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர். ஆனால், ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் ஏற்பட்ட சண்டையில் பிரதீப், நிகிலாவைச் சரமாரியாகத் தாக்கியதாகவும், படுகாயமடைந்த நிகிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, பிரதீப் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகப் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கரூர் விபத்தில் உண்மை வெளிவருமா? மருத்துவர், ஆட்சியரிடம் 2 மணி நேரம் சிபிஐ விசாரணை!

    இந்த நிலையில், இன்று இந்த விவகாரம் குறித்து பஞ்சாயத்துப் பேசி முடித்துவிட்டு, தன்னுடைய பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நிகிலா அவரது அண்ணன் விவேக் (33) மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்துக்கொண்டு முத்தையன்செட்டிபட்டியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கே பிரதீப், சிவக்குமார் மற்றும் நிகிலாவின் குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில், ஆத்திரமடைந்த பிரதீப், கத்தியால் விவேக்கைச் சரமாரியாகக் குத்தியதில் விவேக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைப் பார்த்த நிகிலா மயங்கி விழுந்துள்ளார். அப்போது, மயங்கி விழுந்த நிகிலாவை சிவக்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

    இந்தக் கொடூரச் செயலுக்குப் பின், பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் இருவரும் தலைமறைவாகி விட்டார்கள்.

    போடி தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் நிகிலா மற்றும் அவரது அண்ணன் விவேக்கின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்நேக பிரியா அவர்கள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பிரதீப் மீது ஏற்கனவே 7க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. கொலை செய்யப்பட்ட நிகிலா வழக்கறிஞருக்குப் படித்து முடித்துள்ளார். விவேக் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தவர்; அவருக்குத் திருமணமாகி ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தப்பி ஓடிய பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமாரைத் தீவிரமாகத் தேட DSP சுனில் தலைமையிலான போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு வருகை: பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

    மேலும் படிங்க
    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    குற்றம்
    ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!

    ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    தேசிய விருது பெற்ற தமிழக ஓவியர்: நட்சத்திர வடிவ ஓவியத்திற்காக குடியரசுத் தலைவர் சிறப்பிப்பு!

    தேசிய விருது பெற்ற தமிழக ஓவியர்: நட்சத்திர வடிவ ஓவியத்திற்காக குடியரசுத் தலைவர் சிறப்பிப்பு!

    தமிழ்நாடு
    இந்தியக் கடற்படை மாரத்தான்:  டிசம்பர் 14 அன்று அதிகாலை 3 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம்!

    இந்தியக் கடற்படை மாரத்தான்:  டிசம்பர் 14 அன்று அதிகாலை 3 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம்!

    தமிழ்நாடு
    "நேற்று வந்த காளான்கள் திமுகவை அழிக்க தகுதி அற்றவர்கள்" – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!

    "நேற்று வந்த காளான்கள் திமுகவை அழிக்க தகுதி அற்றவர்கள்" – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    வங்கதேசப் பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு! பிப்ரவரி 12-ல் தேர்தல்: யூனுஸ் அரசு அதிரடி நடவடிக்கை!

    வங்கதேசப் பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு! பிப்ரவரி 12-ல் தேர்தல்: யூனுஸ் அரசு அதிரடி நடவடிக்கை!

    உலகம்

    செய்திகள்

    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    குற்றம்
    ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!

    ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    தேசிய விருது பெற்ற தமிழக ஓவியர்: நட்சத்திர வடிவ ஓவியத்திற்காக குடியரசுத் தலைவர் சிறப்பிப்பு!

    தேசிய விருது பெற்ற தமிழக ஓவியர்: நட்சத்திர வடிவ ஓவியத்திற்காக குடியரசுத் தலைவர் சிறப்பிப்பு!

    தமிழ்நாடு
    இந்தியக் கடற்படை மாரத்தான்:  டிசம்பர் 14 அன்று அதிகாலை 3 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம்!

    இந்தியக் கடற்படை மாரத்தான்:  டிசம்பர் 14 அன்று அதிகாலை 3 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம்!

    தமிழ்நாடு

    "நேற்று வந்த காளான்கள் திமுகவை அழிக்க தகுதி அற்றவர்கள்" – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    வங்கதேசப் பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு! பிப்ரவரி 12-ல் தேர்தல்: யூனுஸ் அரசு அதிரடி நடவடிக்கை!

    வங்கதேசப் பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு! பிப்ரவரி 12-ல் தேர்தல்: யூனுஸ் அரசு அதிரடி நடவடிக்கை!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share