சிவகங்கை அருகே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ் வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சிவகங்கையில் நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் காரைக்குடி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி திருப்பத்தூர் மானாமதுரை பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அரண்மனை வாசல் பகுதியில் நடந்த பரப்புரை கூட்டத்தில், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திறந்த வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் நடந்த திமுகவின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி அதிமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்கு கேட்டார்.
இதையும் படிங்க: எதே...?! - திமுக தேர்தல் அறிக்கை அதிமுகவோட காபியா?... இபிஎஸுக்கு பொட்டில் அடித்தாற் போல் பதிலடி கொடுத்த கனிமொழி...!
அங்கு தனது பரப்புரையை நிறைவு செய்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டைச் சென்றார். மதகுபட்டி அருகே சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மதகுபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (27) என்ற இளைஞர் மீது பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ் வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார். றுமுகம் தனது டூவீலரில் கோவில் திருவிழா பார்க்க சென்றபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்ததாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
ஆறுமுகத்தின் உடலை சிவகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து மதகுபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்
இதையும் படிங்க: “உனக்கே உன் மேல நம்பிக்கை இல்ல...” - விஜயை வெளுத்து வாங்கிய சீமான்... அண்ணாமலை, இபிஎஸுக்கும் அதிரடி ரிப்ளே...!