விழுப்புரம் மாவட்டத்தில் பணம், பொருள் கடத்தலை தடுக்க 126 பறக்கும் படை மற்றும் நிலையாண கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் வந்த 5 நிமிடங்களில் குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்லவார்கள் என்றும் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சிகள் விளம்பரங்கள் செய்யும் போது உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் ஏ ஐ பயன்பாட்டில் தவறான தகவல்களை கட்சிகள் பரப்ப கூடாது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஷேக் அப்துல் ரஹ்மான் விழுப்புரம் மாவட்டத்தில் பணம் பொருட்களை கடத்தலை தடுக்கும் வகையில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு 9 கண்காணிப்பு குழு என 63 தேர்தல் பறக்கும் படையினரும், 63 நிலையாண கண்காணிப்பு குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

பரிசு பொருட்கள் கொடுப்பது குறித்து புகார் அளித்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு குழுவினர் சென்று விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் கூறி உள்ளார். தேர்தலில் பணம் கொடுப்பதை புகார் அளிக்க சி விஜில் இணைதளம் மூலமாக புகார் அறிவிக்கலாம் என்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள், 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்ல கூடாது அப்படி அதிக தொகை எடுத்து செல்வதென்றதால் உரிய ஆவணங்களோடு எடுத்த செல்ல அறிவுறுத்தினார். விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்கள் மொத்தமாக 15லட்சத்து 86 ஆராயிரத்து 653 பேர் உள்ளதாகவும் மேலும் 18 ஆயிரம் பேர் கூடுதலாக வாக்காளர் பட்டியலில் இணைக்க விண்ணப்பத்துள்ளதால் அது பரிசீலக்கப்பட்டு வருவதாகவும் மார்ச் 26 ஆம் தேதி வரை படிவம் 6 பெறப்பட்டு வாக்காளர்கள் பெயர்களை இணைத்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தையே பரபரப்பாக்கிய ஒற்றை வீடியோ... “2 நாளைக்கு இழுத்து மூடுங்க”... பாரத் பொட்ரோலியம் அதிரடி ஆக்ஷன்...!
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 2166 பூத் அமைக்கபட உள்ளதாகவும், இதில் 10396 பணியாளர்கள் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் காவல் துறையை சேர்த்து மொத்தமாக 17 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். மாவட்ட எல்லை பகுதியில் அன்னிய மாநில மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க 23 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக மதுவிற்பனை செய்ததால் அதனையும் கண்காணிக்கப்படும் என தெரிவித்த்த அவர், மாவட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 251ல் 200 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாக ஆட்சியர் ஷேக் அப்துல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனிமே ஆன்லைன் தான்..! புது ரூல்ஸ்... தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய கட்டுப்பாடுகள்..!!