மகளிருக்கான இட ஒதுக்கீட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலுக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் தொகுதி மறு வரையறை தொடர்பான சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்காக 16ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வாசல் வரை ஆபத்து வந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்கள் கவனம் தேர்தலில் இருக்கும் என்று எண்ணி கமுக்கமாக தொகுதி மறுவறையை முன்னெடுப்பதாகவும் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்றால் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தொகுதி மறு வரையறை தொடர்பாக தமிழ்நாட்டில் விடுக்கப்படுவது மிரட்டல் அல்ல என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.8000 கூப்பன் மாதிரி..! தவெக - திமுகவினர் இடையே கைகலப்பு..! கும்பகோணத்தில் பரபரப்பு..!!
அவசர அவசரமாக தொகுதி மறு வரையறை செய்வதற்கு முயற்சிப்பது தென் மாநில உரிமை படுகொலை என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான். என்றும் கொள்கையும் மாநில உரிமையும் தான் முக்கியம் எனவும் பேசினார். இதைத்தொடர்ந்து, திண்டுக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தோல்வி பயம் காரணமாகவே முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு இருப்பதாக விமர்சனம் செய்தார். 5 மாநிலங்களில் தான் தேர்தல் நடைபெறுகிறது என்றும் பிற மாநிலங்களில் தேர்தல் இல்லை எனவும் குறிப்பிட்டு பேசினார். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் தருணம் இது என்றும் மகளிர் இட ஒதுக்கீட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி முதலமைச்சர் பேசியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!