அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கீழடி அகழாய்வுக்கு அதிமுக தான் காரணம் என்றும் அகழாய்வுக்கு ஜெயலலிதா இருக்கும்போது எடுத்த நடவடிக்கை, அதற்கு பிந்தை நடவடிக்கைகள் குறித்து நேற்றே விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கீழடி அகழாய்வு குறித்து திமுக கே அதிமுகவினரிடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். திமுகவினர் வெளியிட்ட கேலிச்சித்திரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்தவரை மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
இதையும் படிங்க: BJP-க்கு பக்கா ஜால்ரா அதிமுக.. கூஜா தூக்க ரெடி ஆகிட்டாங்க.. திமுக கடும் விமர்சனம்!

இதற்கெல்லாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயக நாட்டில் விரும்பிய கடவுளை வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் மதுரையில் இந்து முன்னணி நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கூறியது அமித் ஷாவின் தனிப்பட்ட கருத்து என்றும், ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அமித்ஷா குறிப்பிட்டு பேசி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சர்ச்சை கீழடி... திமுக மேல எந்த தப்பும் இல்ல! அதிமுக, பாஜகவை சாடிய எம்எல்ஏ எழிலன்!