தூத்துக்குடியில் பள்ளி மாணவன் ஒருவன் மீது சக மாணவர்களே சாதிய வன்மத்துடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வரும் 11-ஆம் வகுப்பு மாணவனை, அவனது சக மாணவர்கள் ஜாதி வெறியில் பள்ளியிலேயே வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. தாக்குதல் நடந்து 4 நாட்கள் கடந்தும், குற்றவாளிகள் மீது எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?" என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக நீதி பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, ஒரு மாணவன் மீது சக மாணவர்களே ஜாதி வெறியில் தாக்குதல் நடத்துவதுதான் உங்கள் சமூக நீதியா? இந்தச் சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது?" என அவர் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் என்றும், பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத் கைவிடுக!” உப்பளத் தொழிலாளர்களுக்காக தேமுதிக அறிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடையே ஜாதி மோதல்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அரசியல் சாடல் திமுக அரசுக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் அடகு வைக்காதீர்!" கனிமொழி எம்பி தூத்துக்குடியில் ஆவேசம்!