தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், சில வாசகங்கள் வெறும் சொற்களாக மட்டுமல்லாமல், ஒரு முழு இயக்கத்தின் உணர்வைத் தாங்கியிருக்கின்றன. அவற்றுள் ஒன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கியமான போராட்ட வாசகம் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இந்த வாசகம், 1960களின் தீவிர அரசியல் போராட்டங்களின் சின்னமாகத் தோன்றியது.
தமிழர்களின் சுயமரியாதை, மொழி உரிமை மற்றும் சமூக நீதிக்கான தாக்குதலைப் பிரதிபலிக்கிறது. இது வெறும் ஒரு அழைப்பு வாசகம் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அடையாளத்தை வலுப்படுத்திய, மக்களை ஒருங்கிணைத்த, வெற்றியின் உறுதியைத் தரும் ஒரு மந்திரமாகப் பரிணமித்தது.
தற்போது பாஜக அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை பயன்படுத்துகிறார்.
இதையும் படிங்க: CM SIR என குரல் கொடுத்தால் ஆட்சி மாறிடுமா? கி.வீரமணி ஆவேசம்...!

திமுகவின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த வள்ளலார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
அப்போது, மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள், யாருடன் போராடும் என்று ஆளுநர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை, இங்கு எந்த சண்டையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊடகங்களை முடக்கும் திமுக அரசு… சட்டம் ஒழுங்கே சந்தி சிரிக்குது! விளாசிய அண்ணாமலை…!