இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கும் வழக்கமான நிகழ்வு இந்த ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இந்நிகழ்வு ஒற்றுமையையும், தேசபக்தியையும் வெளிப்படுத்தும் ஒரு மரபாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவு, ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே நிலவும் அரசியல் மற்றும் நிர்வாக முரண்பாடுகளை பிரதிபலிக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்த புறக்கணிப்பு முடிவை அறிவித்து, ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜனாதிபதிக்கே கெடு விதிக்க முடியுமா? செக் வைத்த முர்மு.. திருப்பிவிட்ட நீதிபதி..!
கடந்த ஆண்டுகளில், சுதந்திர தின தேநீர் விருந்து அரசியல் கட்சிகளுக்கு இடையே உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு தளமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு புறக்கணிப்பு அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகை இந்த விருந்தை வழக்கம்போல நடத்த திட்டமிட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றுதல், பேச்சுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த புறக்கணிப்பு, ஆளுநருக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. இது, வருங்காலத்தில் அரசியல் உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்தது. முன்னதாக கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்தது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. இருப்பினும் கடந்த முறை விஜய் இந்த விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புறக்கணித்துள்ளது. தவெக தலைவர் விஜய், ஆளுநரின் அணுகுமுறைகளைக் கண்டித்து இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கலைஞர் பெயரிலான பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது மற்றும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு தடையாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #2026 ELECTION: ADMK கூட கூட்டணி? அதிரடி முடிவை அறிவித்த தவெக தலைவர் விஜய்..!