நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த அரசியல் ஆக்ஷன் படம், கடந்த ஜனவரி 9 அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தனி நீதிபதி 'யூ/ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது. பின்னர் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று, சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவுக்கு படத்தை அனுப்ப ஒப்புக்கொண்டது.

மறு ஆய்வுக் குழு படத்தை பார்த்து பரிந்துரை செய்த நிலையிலும், சில சமயங்களில் தேர்தல் ஆணையத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் ஜனநாயகனுக்கு எதிராக மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகன் படத்தை நானும் பார்த்தேன்..! வாயை கொடுத்து மாட்டிய பி.டி. செல்வகுமார்..!
மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜய்யின் ஜனநாயகன் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அதை நீக்க கோரியும் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாப்பாபட்டி ஊராட்சி தலைவர் பதவி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 1996 முதல் 2006 வரை அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவெக போட்டி குறித்து நோ கமெண்ட்ஸ்! பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 'கூல்' பதில்!