முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட "உங்க கனவை சொல்லுங்க" திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக அணுகி, அவர்களின் தனிப்பட்ட கனவுகள், எதிர்கால எதிர்பார்ப்புகள், தேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த கருத்துகளை சேகரிக்கும் ஒரு பெரிய அளவிலான மக்கள் தொடர்பு முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று சிறப்பு படிவங்களை நிரப்பி, மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்துவமான "கனவு அட்டை" வழங்கப்பட்டு, அதன் மூலம் கோரிக்கைகளின் நிலையை இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் மக்களின் பெரும்பாலான கனவுகளை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடும் என முதலமைச்சர் உறுதியளித்தார். இந்த திட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம் செய்து பேசி இருந்தார். அப்போது தனக்கு நயன்தாரா வேண்டும்., அதனை முதல்வர் நிறைவேற்றுவாரா என்று நக்கலாக பேசி இருந்தார்.

அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. தான் பேசியதற்கு சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்த நிலையில், பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டித்துள்ளார். அரசியல் நாகரிகமும், அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு இருந்ததே இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். நடிகை குறித்து சி.வி ஷண்முகம் பேசி இருந்த நிலையில் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். சிவி சண்முகத்தின் அருவருக்கத்தக்க பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பது வீண் என்று கூறினார்.
இதையும் படிங்க: நேற்று ஏன் வரல? குற்றவாளிகள் எங்கே? கனிமொழியிடம் கிராம மக்கள் ஆவேசம்..!
கனிமொழியின் கண்டன பதிவில், “அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்”. என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: தோளோடு தோள் நின்ற மகத்தான போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!