தவெக இன்னமும் படங்கள்ல வர்ற டயலாக்ஸ் மாதிரி தான் இருக்கே தவிர, இன்னும் உண்மையான ஒரு ஆக்ஷனை பார்க்க முடியல. மக்கள் எதிர்பார்த்தது வந்து கண்டிப்பா இந்த ஊழல் செஞ்சவங்க எல்லாம் தண்டிக்கப்படுவாங்கன்னு, ஆனா அது இன்னும் நடக்கவில்லை என புதுச்சேரி எம் எல் ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் கருத்து
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவராகவுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர். எல்.ஜே.பி கட்சி வந்து தமிழகத்துல எந்த மாதிரி இதுல இருக்கு? என்ற கேள்விக்கு
நாங்க தமிழ்நாட்டிலும் ஸ்டார்ட் பண்ணி, தமிழ்நாட்டிலும் ஃபுல் வேகத்துல போயிட்டு இருக்கு. இப்ப நிறைய போஸ்டிங்ஸ் எல்லாம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு. 500-க்கும் மேல போஸ்டிங்ஸ் நாங்க போட்டுட்டோம். இன்னும் கட்சி செயல்பாடுகள்ல தீவிரமா இருக்கு. அடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்க தயார் ஆகிட்டு இருக்கோம். இடைத்தேர்தலில் வந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வந்து தவெகவுடைய ஆதரவு அவங்களுக்குள்ளேயே ரொம்ப குழப்பமா இருக்கு. ஏன்னா இங்க அவங்க எதிர்த்துட்டு இருக்காங்க, அங்க ஆதரவு தெரிவிக்கிறது உண்மையிலேயே ஒரு பெரிய குழப்பத்தை தான் உண்டாக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் கிட்டயே இங்க கேட்பாங்க. இருந்தாலும் கொஞ்சம் கன்பியூசிங்காகத்தான் இருக்கு. அவங்களுக்கே குழப்பமா தான் இருக்காங்க, என்னன்னு ஒரு தெளிவில்லாமல் தான் இருக்கிறாங்கள்.
இதையும் படிங்க: எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!
இந்த இடைத்தேர்தல் வெற்றி எந்த அளவுக்கு மாற்றத்தை தரும், அது ஒரு பெரிய தாக்கம் ஒன்னும் இல்லை. ஃபுல் மெஜாரிட்டி இருக்குறதுனால, இதே தமிழ்நாட்டுல அதற்கு ஒரு பெரிய தாக்கம் இருக்கலாம். ஆனால் இப்ப நடவடிக்கைகள் மக்கள் நம்ம பார்த்துட்டு இருக்கோம் எல்லாருமே ஒரு 50-50 தான் இருக்கு. இங்கயும் எப்படி சூழ்நிலை மாறும்ங்கிறது நமக்கு தெரியாது.
தமிழக இடைத்தேர்தலில் எல்.ஜே.கே போட்டியிடுமா?, இந்த இடைத்தேர்தலில் நாங்க போட்டியிடல. எங்களோட கட்டமைப்பெல்லாம் நாங்க ரெடி பண்ணிட்டு இருக்கோம். அடுத்து உள்ளாட்சி தேர்தலுக்காக நாங்க ரெடி ஆகிட்டு இருக்கோம்.
தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கு? சட்டமன்றக் கூட்டத்தொடர் விவாதங்களெல்லாம் எப்படி நீங்க பார்க்குறீங்க
அதான், உடனே திமுக மேல அதிரடி நடவடிக்கை எல்லாம் எடுப்பேன்னு சொல்லித்தான் வந்தாங்க. இதுவரைக்கும் அந்த அதிரடி நடவடிக்கை... அதாவது எவிடென்ஸோட ஈடில இருந்து எல்லாமே டாக்குமெண்ட்டே சப்மிட் பண்ணிட்டாங்க. இந்த மாதிரி இவங்க இவ்வளவு ஊழல் பண்ணிருக்காங்கன்னு எல்லா ஆதாரத்தோட சப்மிட் பண்ணிட்டாங்க. இதுக்கப்புறம் இவங்க ஒரு எஃப்.ஐ.ஆர் போட்டு அதை பிராசஸ் பண்றதுதான் அவங்க வேலை. அதுகூட இன்னும் தாமதமா பண்ணிட்டு இருக்காங்க. இன்னமும் படங்கள்ல வர்ற டயலாக்ஸ் மாதிரி தான் இருக்கே தவிர, இன்னும் உண்மையான ஒரு ஆக்ஷனை பார்க்க முடியல. மக்கள் எதிர்பார்த்தது வந்து கண்டிப்பா இந்த ஊழல் செஞ்சவங்க எல்லாம் தண்டிக்கப்படுவாங்கன்னு, ஆனா அது இன்னும் நடக்கல.
முதல்வருடைய பதிலுரை எப்படி இருந்தது? குறிப்பா மிசா பற்றி பேசினதை கடுமையா எதிர்த்திருக்காங்களே.
மிசா அவர் ஒரு பெண்ணுகிட்ட தவறா நடந்துகிட்டதாகவும், ஒரு காலேஜ்ல போயி... சின்ன வயசுல இருந்து அந்த குடும்பத்துக்கே பார்த்தீங்கன்னா, அந்த பெண்கள்கிட்ட தவறா நடந்துக்கிறது திமுகவில் உள்ள இரத்தத்தில் இருக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த விஷயத்துக்காகத்தான் இது நடந்துச்சுன்னு நாங்க சின்ன வயசுல இருந்து கேள்விப்பட்டதுதான். ஆனா யாருமே தைரியமா வெளியில வந்து பேசல இந்த விஷயத்தை. ஆனால் இந்த விஷயத்தை மிசாவுக்காக தான் கிரெடிட் எடுப்பது ரொம்ப தப்பு. ரீசண்டா கூட நிறைய வீடியோஸ் எல்லாம் வந்துட்டு இருக்கு.
அவர் நாடகத்தில் நடிச்சிட்டு இருந்தவருக்கு போய் எதுக்கு மிசால போட போறாங்க? அவர் அந்த காலத்துல தீவிரமா அரசியலில் தீவிரமான ஈடுபாடும் இல்லை அந்த டைம்ல. அப்படி இருந்திருந்தா அவங்க முன்னால மத்த மகன்கள் இருந்திருக்காங்க, அவங்க மேல மிசா வந்திருக்கும். இவர் எந்த ஈடுபாடுமே இல்லாம மிசா போடுறாங்கங்கிறது ஒரு பொய்யான கிரெடிட் எடுத்துக்கிறாங்க.
முதல்வர் அதைக்குறித்து ஒரு வீடியோவே வெளியிட்டிருந்தாரே, அதை எப்படி பார்க்குறீங்க என்ற கேள்விக்கு, இன்னமும் அவருக்கு இன்னும் பெட்டரா கிளாரிஃபை பண்ணிருக்கணும். ஏன்னா மிசாங்கிறது எதுக்காக பண்ணப்பட்டது, ஏன் அவருக்காக அடி விழுந்ததுன்னா, ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியோட சம்பந்தப்பட்ட ஒரு பெண்ணிடம் தவறா நடந்து, அவர் மேல ஆக்ஷன் எடுக்காம, அந்த டைம்ல சூழ்நிலையில இதை பயன்படுத்தி ஆக்ஷன் எடுக்கப்பட்டதே தவிர, இது தவறான... இப்ப எப்படி தமிழுக்காக போராடினோம், தமிழுக்காக உயிர் நீத்தோம்னு சொல்றாங்களோ, அதெல்லாம் இவங்க சொல்றது ஒன்னு, நடக்குறது ஒன்னு. அதுதான் திமுகவோட இரட்டை வேடம்.
முதல்வரின் உடல்மொழியும் விமர்சனமாகியிருக்கே, கம்யூனிஸ்ட் எல்லாம் விமர்சனம் பண்ணியிருக்காங்களே என்ற கேள்விக்கு, எல்லாத்துக்கும் சுதந்திரம் இருக்கு. யாரும் சொல்லக்கூடாது செய்யக்கூடாதுன்னு சொல்ல முடியாது. அப்படி பார்த்தா கம்யூனிஸ்ட் இன்னமும் தீவிரமா பேசிட்டு இருக்கணும். இவங்க அன்னைக்கே நிறைய விஷயத்துக்கு போராடி எதிர்ப்பை தெரிவிச்சிருக்கணும், அதுக்கெல்லாம் அவங்க தெரிவிக்கல. இன்னைக்கு வந்துட்டு இத மட்டும் சொல்றது வந்து நம்ம ஏத்துக்க முடியாது.
எல்.ஜே.பி கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்ற கேள்விக்கு, கூட்டணி வந்து இப்ப எதுவும் சொல்ல முடியாது. கூட்டணிங்கிறது எப்பவுமே கடைசியில முடிவு பண்ணக்கூடிய ஒரு விஷயம். இப்ப வந்து நாங்க எங்க கட்சி பணிகள், எங்களுக்கு அடிமட்ட தொண்டர்கள் எல்லாம் பேஸ்மென்ட் இன்னும் ஸ்ட்ராங் பண்ணிட்டு இருக்கோம். அப்படி இருக்கும்போது எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்போது, அதை கடைசியில போகும்போதுதான் முடிவு பண்ண முடியும். இதுபோக மத்த மாநிலங்கள்லயும் எங்களுக்கு ஆதரவு வந்துட்டு இருக்கு. சோ, ஃபர்ஸ்ட் தமிழ்நாடு, புதுச்சேரில நல்லா பேஸ் போட்டுட்டு அதுக்கப்புறம் மத்ததுல யோசிப்போம்.
இந்த ஆட்சி எப்படி போயிட்டு இருக்கு? என்ற கேள்விக்கு, இன்னும் அதிரடியா ஆக்ஷன் இருக்கணும். இன்னும் சொல் டயலாக்ஸ்லயே இருக்கு, அது ஆக்ஷனா மாறணும்னு ஆசைப்படுறோம் என LJK கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறினார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!