மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்தும் பி எம் ஸ்ரீ திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் பி எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காத நிலையில் நிதி வழங்கப்படாமல் இருந்து வந்ததாக கூறப்பட்டது. தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழகவற்றைக் கழக அரசு பொறுப்பேற்று இருக்கும் சூழ்நிலையில் பி.எம் ஸ்ரீ திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பி எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் கொடுத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கான நிதி வந்து சேரவில்லை என்று தெரிவித்தார். கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் பிரச்சனையை பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எந்தவித மறைமுக அழுத்தத்திற்கும் நாங்கள் அடி பணிய மாட்டோம் என்றும் உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார். இருமொழிக் கொள்கை என்பது தங்கள் கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை என்றும் விளக்கம் கொடுத்தார். ஆங்கில மொழி போதுமானதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புதிய அரசுக்கு நெருக்கடி..! பி.எம். ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போடுங்க..! மத்திய அரசு கடிதம்..!!
உலகத்தில் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் பல அமைப்புகள் மூலம் சட்டத்திற்கு உட்பட்டு பேசி தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பல விஷயங்கள் நீதிமன்றத்திற்கு சென்று இருப்பதாகவும் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாணவர்களின் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தால் சமரசம் இன்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: களேபரமான உட்கட்சி பிரச்சனை..! அதிமுக மா. செ. கூட்டம்..! EPS-க்கு அவைத் தலைவர் ஆதரவு..!