இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார். இதற்கிடையில் நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்க வேண்டும் என்று முதல் வஸ்தானின் வலியுறுத்தியிருந்தார். தற்போது மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்து இருப்பதாகவும் அடுத்த துரோகம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் செய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை என்று தெரிவித்தார். அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை மதிய பாஜக அரசு நிராகரித்துள்ளது என்று கூறினார்.

கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை என்றும் விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை எனவும் கண்ணீர் ஏன் தெரியவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன் என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: பீகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது… இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி ஆரவாரப் பேச்சு…!
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள் என சரமாரியாக சாடினார். எனவே, உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்யும் என நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேடுகெட்ட ஆட்சி... காட்டாட்சி..! கடிவாளம் போடுவோம் முதல்வரே... நயினார் உறுதி...!