ஓரணியில் தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டின் உரிமைகளையும் தனித்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் சமூக செயல்திட்டம். இந்தி திணிப்பு, நிதி பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிரான ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது. இந்த செயல்திட்டம் தமிழ்நாட்டின் கலாச்சார, மொழி, மற்றும் பொருளாதார உரிமைகளை வலியுறுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு முயற்சி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திமுகவின் அரசியல் உத்தியாகவும், மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஓரணியில் தமிழ்நாடு, ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்கை என்ற நோக்கோடு காணொளி காட்சி வாயிலாக என்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. காணொளியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஊரணிகள் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழக மக்களை நம்மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கவே ஊரணிகள் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். Whatsapp, Twitter உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் ஓரணியில் தமிழ்நாடு COMMON DP வைக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பாக்குறதுலாம்... திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய எச். ராஜா!

மேலும், ஊதினால் அனைய நாம் என்ன தீக்குச்சியா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், நாம் உதயசூரியன் என பேசினார்.ஓரணியில் தமிழ்நாடு என்பது திமுகவின் உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல., தமிழ்நாட்டு மண், மொழி ஆகியவற்றைக் காக்க மக்கள் அனைவரையும் ஒரே அணியாக சேர்க்கும் முயற்சி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: 2G ஊழல் ராசா.. நாக்கை அடக்கு! கொந்தளித்த பாஜகவினர்.. புதுவையில் பதற்றம்!